தமிழகத்தில் 1.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நவீன நீர்வழிச்சாலைத் திட்டம்

Madurai Minutes
0

 

சமீபத்தில் தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ள பெரம்பலூர் சிப்காட் தொழிற்சாலை மூலம் ரூ. 5,000 கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்றும், 50,000 பேருக்கு வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது.

அதே சமயம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் பிணைக்க கூடிய தமிழ்நாடு நவீன நீர்வழிச்சலைத் திட்டத்தை செயல்படுத்தினால் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு கிடைக்கும். இதில் 1.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். அதோடு, தமிழகத்தின் நீர்மேலாண்மை, தொழில்வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் மேம்படும்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.A.P.J.அப்துல்கலாம் அவர்கள் தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை தனது 'கனவுத்திட்டம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் "பொறியாளர் ஏ.சி.காமராஜ் கொடுத்த நவீன நீர்வழிச்சாலை ஒரு ஆக்கப்பூர்வமானத் திட்டம். அவரது ஆலோசனைகளை ஏற்று தமிழக அரசு அதனை செயல்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்   

தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்திற்கு ஒரு லட்சம் கோடி முதலீடு கிடைப்பதால் தமிழக அரசு உடனே செயல்படுத்த முடியும். ஆகவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழகத்தை சிறந்து விளங்கச் செய்ய வேண்டும்.    

பொறியாளர் ஏ.சி.காமராஜ்

தலைவர் – நவீன நீர்வழிச்சாலை


 



Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !