பள்ளி மாணவர்களுக்கு விதைப்பென்சில் வழங்கிய மண்ணின் மைந்தர்கள்

Madurai Minutes
0



மதுரை மாவட்டம், உசிலம்பட்டி A.ராமநாதபுரம் அரசு கள்ளர் தாெடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரம் வளர்ப்பாேம், பிளாஸ்டிக் பை தவிர்ப்பாேம் , துணிப்பை பயன்படுத்துவாேம் நாேக்கத்துடன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வாக நாட்டு காய்கறி விதைகள் அடங்கிய விதைப்பென்சில், துணிப்பைகளை மதுரை மண்ணின் மைந்தர்கள் அழகுராஜா வழங்கினார்.

விதைப்பென்சில் என்பது பின்னர்‌அழகுராஜா கூறியதாவது

பழைய காகிதம்,கரும்பு சக்கையில் செய்யப்பட்டது அதன் பின் சிறிய குப்பியில் நாட்டு காய்கறி விதைகள் இருக்கும்.குறும்பயிர்களான தக்காளி, பச்சை மிளகாய், தக்காளி, அவரை உள்ளிட்ட பல்வேறு காய் மற்றும் பழங்களின் விதைகள் இந்த பென்சிலின் மறுமுனையில் உள்ள மூடி போன்ற அமைப்பில் அடைக்கப்பட்டுள்ளன. இந்த பென்சிலை பயன்படுத்திய பின்னர் வீசி செல்லும்போது அதன் கேப்சூல் வடிவிலான முனை வழியாக செடிகள் வளரும். அல்லது நாம் பென்சில் எழுத துவங்கும் முன் பென்சில் பின்னால் உள்ள விதைகளை விதைத்தால் பென்சில் முழுவதுமாக எழுதி முடிப்பதற்குள் செடி முளைத்து விடும் என்றார்.இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் சாந்தா,ஆசிரியர் தனலட்சுமி,ரதி,பிரபாகரன் கலந்து காெண்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !