மதுரை விஷால் டி மால் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில் வைர நகைகளின் கலைநயமிக்க கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்.

Madurai Minutes
0


 மதுரை

 கலைநயமிக்க வைர நகைகளின் கண்காட்சி தற்போது மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மதுரை விஷால் டி மால் ஷோரூமில் நடைபெற்று வருகிறது. தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும், அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிருபிக்கும் வகையிலும் உள்ளன. இந்த கண்காட்சியை டெம்பிள் சிட்டி திரு.கே.எல்.குமார் (டெம்பிள் சிட்டி குரூப்) துவக்கி வைத்தார். அவருடன் திரு.வேணுகோபால் குடும்பத்தினர், திரு.மனேஷ் குடும்பத்தினர், ஆகியோர் உடன் இருந்தனர். மற்றும் திரு,சுதீர் முகமது (கிழக்கு மண்டல தலைவர் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்), திரு.அமல்நாத் (மேலாண்மை பயிற்சி மதுரை மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்), திரு.ஆதர்ஷ் (மேலாண்மை பயிற்சி மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்), திரு.சிபின் (இணை மேலாளர் விற்பனை மதுரை விஷால் டி மால் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்), திரு,ரஞ்சித் (இணை வர்த்தக மேலாளர் மதுரை விஷால் டி மால் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்), மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியோர் உள்ளனர்.


மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும் வைரநகைகளான மைன் பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’ குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை இந்தகண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதைத்தவிர அழகிய நகைகளை சிறப்பு சலுகையில் வாங்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. 


கலைநயமிக்க இந்த கண்காட்சி கலைகளில் ஆர்வமுள்ளவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும். இந்த கண்காட்சி டிசம்பர் – 10, 2022 ஆம் தேதி முதல் டிசம்பர்- 18, 2022 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 280-க்கும் மேற்பட்டசில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், இராமநாதபுரம், தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பூர், ஆகிய நகரங்களில் 19 கிளைகளை கொண்டுள்ளது.

மலபார்கோல்டு&டைமண்ட்ஸ்நிறுவனம்பற்றி:

நாட்டில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக குழுமங்களில் ஒன்றான மலபார் குழும நிறுவனங்களின் முன்னணி பிரிவு தான் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் ஆகும். இந்தியா, சிங்கப்பூர், வளைகுடா மற்றும்அமெரிக்க நாடுகளில் சில்லறை விற்பனை பிரிவில் உள்ள இந்த நிறுவனம் பிஐஎஸ் சான்று பெற்ற 916 தங்க நகைகளையும் ஐஜிஐ சான்று பெற்ற வைர நகைகளையும் பிஜிஐ சான்று பெற்ற பிளாட்டின நகைகளையும் வெள்ளி நகைகளையும் விற்பனை செய்கிறது. அனைத்து நகைகளும் வெளிப்படையான விலை, நிகர எடை, கற்களின் எடை, சேதாரம், கற்களுக்கான விலை, அதன் நிகர எடை ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடும் பட்டியலுடன் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நகையின் தயாரிப்பு குறித்தும் விலையையும் எளிதாக புரிந்து கொண்டு வாங்குவதற்கு திட்டமிடலாம். வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு, அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானலும் திரும்ப பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் உள்ளிட்ட 10 வாக்குறுதிகளை நமது மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

இவை தவிர மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு அதன் சமூகபொறுப்பும் முக்கிய காரணமாக உள்ளது. தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் என பல்வேறு சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்கிறது.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !