மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
0
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே உள்ள வடபழஞ்சி நாகமலை புதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி பூர்ணாஹூதி தீபாரதனை யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடைபெற்றது.தொடர்ந்து ஸ்ரீ செல்வ விநாயாகர், ஸ்ரீ மந்தையம்மன், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீகால பைரவர்,ஸ்ரீ தனவீர ஆஞ்சநேயர் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.பின்னர் ஸ்ரீ மந்தையம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் மஹா அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை நாகமலைப்புதூர் கிராம பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags