மதுரை
பள்ளிக் கல்வித்துறை சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி ( 14 மற்றும் 17 வயது ) கோ - கோ , ( 17 வயது ) சிலம்பம் , சாலை சைக்கிள் ஓட்டுதல் மற்றும் டேக்வாண்டோ போட்டிகளில் மதுரை நாடார் உறவின்முறைக்குப் பாத்தியமான நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 41 மாணவர்கள் வெற்றி பெற்று மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள இம்மாணவர்களையும், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி தலைவர் தர்மராஜ், செயலாளர் ஆனந்த கிருஷ்ணன், துணைத் தலைவர் செந்தில்குமார், இணைச்செயலாளர் பாஸ்கரன், தலைமையாசிரியர் ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.