மதுரை
நாகமலை புதுக்கோட்டை ஆனந்த ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 50ம் ஆண்டு பொன்விழா மண்டல பூஜை மற்றும் அன்னதான விழா நடைபெற்றது. மண்டல பூஜையை முன்னிட்டு மங்கள வாத்தியம், லட்சார்ச்சனை, சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை ஊஞ்சல் சேவையும் சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது..இன்று மாலை நகர்வலம் வீதி உலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை குருசாமி சோமசுந்தரம், மேல் சாந்தி கோபால், துணை குரு சுவாமிகள் சின்னன், ஜெகநாதன் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.