இளைஞர் திறன் திருவிழாவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் திட்ட இயக்குநர் காளிதாசன் வழங்கினார்

Madurai Minutes
0

 

மதுரை

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் ஆலோசனைப்படி செல்லம்பட்டி ஒன்றிய அளவிலான மாபெரும் இளைஞர் திறன் திருவிழா செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காளிதாசன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராமர் முன்னிலை வகித்தார். வட்டார இயக்க மேலாளர் சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார்.

திட்ட அலுவலர்கள் சின்னத்துரை, வெள்ள பாண்டி, காளிதாஸ் மற்றும் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் மணிகண்டன்,


கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி முத்துராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முகாமில் சுமார் 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றது. இதில் திரளான ஆண் பெண்கள் கலந்து கொண்டு தகுதியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்தனர். இளைஞர் திறன் திருவிழாவில் தேர்வு செய்யப்பட்ட தகுதியானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை திட்ட இயக்குநர் காளிதாசன் வழங்கினார்.இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பூங்கொடி, தாய்பிள்ளை, அன்னபாண்டி, வனிதா, சவுமியா மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !