மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர். பி. உதயகுமார் ஆலோசனைக்கிணங்க வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கொரியர் கணேசன் அறிவுறுத்தலுக்கிணங்க மன்னாடிமங்கலம் தெற்கு கிளை கழக செயலாளர் ராஜபாண்டி தலைமையில் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பால்முதலியார், தங்கச்சாமி, வீரபாண்டி, கருப்பு, காமாட்சி,வண்டிக்கார கருப்பு, சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி, கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.