முட்டை தட்டுப்பாட்டை சமாளிக்க மலேசியா பறக்கும் நாமக்கல் முட்டைகள்

Madurai Minutes
0

மலேசியாவில் நிலவி வரும் முட்டை தட்டுப்பாட்டை சமாளிக்க உதவுமாறு கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்திடம் மலேசிய விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். அமைச்சரின் கோரிக்கையின் அடிப்படையில், மலேசியாவில் முட்டை தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய மலேசிய அரசு தயாராக உள்ளதாக கோலாலம்பூரில் உள்ள இந்திய துணைத் தூதர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) மற்றும் விலங்குத் தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவைகள் (AQCS) சான்றிதழ் செயல்முறையை விரைவுபடுத்தி, நாமக்கல்லில் இருந்து மலேசியாவிற்கு முதன்முறையாக முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டது.

இதன்படி, திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 90 ஆயிரம் முட்டைகள் விமானத்தில் ஏற்றப்பட்டு இன்று காலை (டிசம்பர் 15) காலை மலேசியாவில் தரையிறங்கியது.

இந்த முட்டைகள் மலேசியாவில் சோதனைக்கு பிறகு அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுமதி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய மண்டல தலைவர் திருமதி. ஷோபனா குமார் தெரிவித்துள்ளார். 


 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !