மதுரை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.64 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற திறப்பு விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு புதிய ஊராட்சி மன்ற அலவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணை தலைவரும் தெற்கு ஒன்றிய செயலாளருமான முத்துராமன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி, துணைத் தலைவர் சுமதி ஊராட்சி செயலாளர் ஜெயபாலன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.