மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு முகாம்

Madurai Minutes
0


 மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு முகாம் மத்திய அரசின் எம்எஸ்எம்இ புரோமோசன் கவுன்சில் சேர்மன் முத்துராமன் தலைமையில் நடைபெற்றது. செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கவிதா ராஜா முன்னிலை வகித்தார். இதில் செல்லம்பட்டி பகுதியை சுற்றியுள்ள மகளிர் சுய உதவி குழு பெண்கள், இளைஞர்களுக்கு கலந்து கொண்டனர்.முகாமில் சிறு குறு தொழில் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

முகாமில் செல்லம்பட்டி துணைசேர்மன் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமர்,மாவட்ட வள பயிற்றுநர் அழகுமண்ணன், வட்டார இயக்க மேலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !