விவசாயிகளுக்கு நிலையான விவசாயம் குறித்து செயல் விளக்கமளித்த மாணவிகள்
0
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியம் வெள்ளைக்காரன் பட்டி கிராமத்தில் நிலையான விவசாயம் மற்றும் அதன் பயன்கள் பற்றி உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் ஜெயபிரியா பாலஓவியா அனுஶ ,நாகசுதர்ஷினி,கீர்த்தனா, சந்தியா, சுருதிகா தேவி, ஹேமலதா ஆகியோர் எடுத்துரைத்து கூறினர். நிலையான விவசாயம் செய்ய தேவையான அடிப்படை வசதிகள் ( இயந்திரங்கள், போக்குவரத்து வசதி, சேமிப்பு கிடங்கு, சந்தை வசதி, உரங்கள், போதுமான அளவு இடவசதி, பங்குதாரர்கள், சாகுபடி நடைமுறைக்கு தேவையான பொருட்கள், பயிர் வகைகள், நோய் தாக்காத ஆரோக்கியமான செடிகள், பொருளாதாரம்) அனைத்தும் தேவை என எடுத்துக் கூறினர். நிலையான விவசாயம் செய்வதன் மூலம் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரம் அமையும் என எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கி கூறினர்.இதில் ஏராளமான விவசாயிகள் பயன்பெற்றனர்.
Tags