செல்லம்பட்டி ஒன்றியம் திடியன், வலங்காகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி என்.எஸ்.எஸ். சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் அரசுப் பள்ளி வளாகங்கள், கோயில்கள் மற்றும் பொது இடங்களைத் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. முகாம் நிறைவு விழாவிற்கு கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ் தலைமை தாங்கினார்.பொருளாதாரத்துறைதலைவர் ஜெயராஜ் நிறைவு விழாப் பேருரை நிகழ்த்தினார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் நன்றி கூறினார்.
இதில் திட்ட அலுவலர்கள் ராமச்சந்திரன், விஜய், கலைச்செல்வி, அபிராமி மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், என்.எஸ்.எஸ். மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.