கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி கோவில்பட்டி அணி சாம்பியன்

Madurai Minutes
0


 மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் அருட்தந்தை மொந்த்தோ நினைவாக நடத்தப்படும் 11 வது மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. தொடக்க விழாவில் உடற்கல்வித்துறை பேராசிரியர் முத்துக்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ் போட்டியை துவங்கி வைத்தார் . சிறப்பு விருந்தினராக கல்லூரியின் அதிபர் ஜான் பிரகாசம் கலந்து கொண்டு பேசினார். இப் போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 16 கல்லூரிகள் கலந்து கொண்டன. நாக் அவுட்முறையில் நடைபெற்ற போட்டிகளில் சென்னை லயோலா கல்லூரி, கோவை என்.ஜி.பி. கல்லூரி, கோவில்பட்டி துரைசாமி நாடார் மாரியம்மன் கல்லூரி, கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி அணிகள் மோதின. இதில் முதல் இடத்தை பிடித்த கோவில்பட்டி துரைசாமி நாடார் மாரியம்மன் கல்லூரிக்கு 15000 ரூபாயும், இரண்டாம் இடத்தை பிடித்த கோவை பி.எஸ்.சி கல்லூரிக்கு 12000 ரூபாயும், மூன்றாம் இடத்தை பிடித்த கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரிக்கு 10000 ரூபாயும், நான்காம் இடத்தை பிடித்த சென்னை லயோலா கல்லூரிக்கு 8000 ரூபாயும் கோப்பைகளும் வழங்கப்பட்டது. தொடர்ந்து பரிசளிப்பு விழாவில் உடற்க்கல்வித்துறை பேராசிரியர் முத்துராஜா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி செயலர் அருள் தந்தை கில்பர்ட் கமிலஸ், கல்லூரி முதல்வர் அருள் தந்தை காட்வின் ரூபஸ், இணை முதல்வர் சுந்தர்ராஜ், விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் அருள் தந்தை இன்னாசி ஜான் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நினைவு கோப்பையை கல்லூரி அதிபர் தந்தை ஜான் பிரகாசம் வழங்கினார். இதில் கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ் தலைமையேற்று கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் வனிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இந்தப் போட்டியின் அமைப்பு செயலர் மற்றும் உடற் கல்வித்துறை தலைவர் வீர பரமேஸ்வரி நன்றி உரை வழங்கினார். உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் முத்துவீரன் கதிரேசன் ஆகியோர் இப் போட்டிக்கான ஏற்பாடுகள் செய்தனர்


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !