படவிளக்கம் - திருப்பத்தூர் எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள ஶ்ரீசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி வெள்ளிக்கிழமை கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் சிவாச்சாரியார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள ஶ்ரீசக்தி விநாயகர் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
எம்.ஜி.ஆர்.நகர் மற்றும் கான்பா நகர் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீசக்திவிநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை 8 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. வியாழக்கிழமை காலை 9 மணிக்கு வாஸ்துசாந்தியும் மாலை 5 மணிக்கு அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரத்துடன் முதல்கால யாகபூஜை துவங்கபெற்று இரவு 8.30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக நாளான வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் 2 ம் கால யாகபூஜை நடைபெற்று பூர்ணாகுதியைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு கடப்புறப்பாடு நடைபெற்று 8 மணிக்கு விமானத்திற்கு சிவாச்சாரியர்களால் புனித கலச நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு விநாயகருக்கு மகா அபிஷேகம் நடைபெற்று பிராசதம் வழங்கபட்டது. விழாவில் சர்வசாதக மற்றும் யாகவேள்வி பூஜைகளை கணேசகுருக்கள் ரமேஷ்குருக்கள் தலைமையிலா சிவாச்சாரியர்கள் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.