இந்திய ரயில்வேயின் பயணிகள் வசதிகள் குழு மதுரை கோட்டத்தில் ஆய்வு

Madurai Minutes
0

 


 

மதுரை மார்ச்.

இரயில்வே அமைச்சகத்தின் பயணிகள் வசதிகள் குழு மதுரை கோட்டத்தில் 06.03.2023 முதல் 08.03.2023 வரை மூன்று நாட்கள் ஆய்வு செய்கிறது.

குழு உறுப்பினர்கள் கே.ரவிச்சந்திரன், மதுசூதன பி,

கோட்டாலா உமா ராணி மற்றும் அபிஜித் தாஸ் ஆய்வு குழு, கோட்ட ரயில்வே மேலாளர் பி.ஆனந்தை, மதுரையில்  சந்தித்தது.

இக்குழு விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ரயில் நிலையங்களையும், நாளை (07.03.2023) தென்காசி, செங்கோட்டை மற்றும் சங்கரன்கோவில் நிலையங்களையும்,  08.03.2023 அன்று கோவில்பட்டி, சாத்தூர் மற்றும் திருமங்கலம் ரயில் நிலையங்களை பார்வையிடுகிறது. 

இக்குழுவின்  மற்றொரு உறுப்பினர் தராம் குமார் பஹான் நாளை வருகை தந்து மற்ற உறுப்பினர்களுடன் இணைகிறார். R.P. ரதிபிரியா, மூத்த வர்த்தக மேலாளர்,எம்.பிரவீனா, மூத்த  கோட்டப் பொறியாளர்( தெற்கு )மற்றும் கோட்ட  வர்த்தக மேலாளர் ஜே.பிரபு  பிரேம்குமார் சந்திப்பின் போது உடனிருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !