மதுரை,
உசிலம்பட்டி அருகே வாலாந்துர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது . இதில் சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ஊரக பணி அனுபவ திட்டத்தின் கீழ் கிராமப்புற பள்ளிகளில் கண்காட்சி நடைபெற்றது.
சிற்றபு விருந்தினராக விஜய பாண்டியன் ( இயற்கை விவசாயி) மற்றும் கணேசன் ( நாட்டுமாடு சாண கைவினை பொருள்கள்) ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த கண்காட்சியில் இயற்கை வேளாண்மை, திருந்திய நெல் சாகுபடி, ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம், சாண எரிவாயு, சொட்டு நீர் பாசனம், உழவன் செயலி, மாடித்தோட்டம், தேனீ வளர்ப்பு,காளான் வளர்ப்பு,மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், பல வகையான உயிர்உரங்கள் மற்றும் நாட்டுரக நெல் வகைகள் ,பலதானியங்கள்,ஆகிய மாதிரிகளை செய்து பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இதில் ஏராளமான மாணவர்கள் , ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.