கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம்

Madurai Minutes
0

 


மதுரை

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நிகழ்ச்சி

கல்லூரி முதல்வர் காட்வீன் ரூபஸ் தலைமையில் நடைபெற்றது. துணை முதல்வர் துரைசிங்கம் வரவேற்றார்.

கல்லூரி அதிபர் ஜான்பிரகாசம், செயலர் கில்பாட் கமிலஸ், இணை முதல்வர் சுந்தரராஜ். மற்றும் துணை முதல்வர் அன்பரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணாக்கர்களுக்கு பாட அறிவு, ஆளுமை வளர்ச்சி, திறமைகள், வருகைப்பதிவு. தேர்ச்சி விவரம், செயல்முறைப் பயிற்சி மற்றும் எதிர்காலத் திட்டம் மட்டும் கல்லூரியின் முன்னேற்றம் வளர்ச்சிக்கான திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஒவ்வொரு துறை சார்பாக பெற்றோர்களுடன் அவர்களுடைய பிள்ளைகளின் தேர்ச்சி விவரம், வருகைப்பதிவு, ஆளுமை வளர்ச்சி, திறமைகள் பற்றி ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அனைத்து பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிப் பற்றி தெரிந்து கொண்டார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுமார் 312 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்துகொண்டனர். துணைமுதல்வர் ஜெயசீலன் நன்றி கூறினார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !