புதுக்கோட்டை மாவட்டம்,
அரிமளம் ஒன்றியம், கீழப்பனையூர் கிராமத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவிகள் வேளாண் செய்முறைகளை விவசாயிகளுக்கு எடுத்து கூறினர்.அதில் ஒன்றாக மூடாக்கு செய் முறையாகும்.மூடாக்கு என்பது மண்ணின் மேற்பரப்பின் ஒரு பகுதியில் அடுக்காக அமைக்கப்படும் ஒரு பொருள் ஆகும்.மூடாக்கின் வகைகள் 1.தழை மூடாக்கு,2.சருகு மூடாக்கு,3.உயிர் மூடாக்கு,4.கல் மூடாக்கு,5.நெகிழி மூடாக்கு,6.தூசி மூடாக்கு,7.செங்குத்து மூடாக்கு.மூடாக்கு மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் மற்றும் வெப்பத்தை கட்டுப்படுத்தும்.மேலும் களைச் செடிகள் வளர்வதை மட்டுப்படுத்தும், நீர் ஆவியாதலை குறைக்கும் மற்றும் மண்ணுயிர்களுக்கும் கூடாரமாய் அமையும் என்று ஜான்சி,ஜெயந்தி,ஜிம்சி ரேச்சல்,கமலப்பிரியா,கார்த்திகா, காவ்யா.ஜெ மற்றும் காவ்யா.ம,கீர்த்தனா,கிருத்திகா.வெ,கிருத்திகா.க,பாரதி ஆகியோர் செயல் விளக்கம் அளித்தனர்.