உங்கள் வயலில் எலி தொல்லையா

Madurai Minutes
0

 

புதுக்கோட்டை மாவட்டம்

அரிமளம் ஒன்றியம், கீழப்பனையூர் கிராமத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவிகள் வேளாண் செய்முறைகளை விவசாயிகளுக்கு எடுத்து கூறினர்.அதில் ஒன்றாக எலி தடுப்பு முறையாகும்.அவர்கள் கூறியதாவது 1ஏக்கர் நிலத்திற்கு 5கிலோ ஸ்போர்ட்டை 15கிலோ மணலில் கலந்து வரப்பைச் சுற்றி வீசிவிட்டால் நிலத்தில் உள்ள எலிகள் அவ்வாசனைக்கு ஓடி வரும்.இதன் மூலம் எலிகளை கட்டுப்படுத்தலாம்.மேலும் வயலில் வரப்பைச் சுற்றி செண்டிப்பூவினை வெட்டிப்போட வேண்டும்.எலிகளின் இனப்பெருக்க காலத்தில் எலி வலைகளை வெட்டி விட வேண்டும்.(இனப்பெருக்க காலம்- ஜனவரி-மார்ச், செப்டம்பர்-அக்டோபர்). முதல் மூன்று நாட்களுக்கு அரிசிப்பொறியுடன் தேங்காய் எண்ணெய் கலந்து அத்துடன் விசம் வைத்து விட வேண்டும்.மேலும் எருக்கு, நொச்சி ஆகியவற்றை வரப்பு பயிராக வளர்த்து எலியினைக் கட்டுப்படுத்தலாம் என்று ஜான்சி, ஜெயந்தி,ஜிம்சி ரேச்சல்,கமலப்பிரியா,கார்த்திகா, காவ்யா.ஜெ மற்றும் காவ்யா.ம,கீர்த்தனா,கிருத்திகா.வெ,கிருத்திகா.க,பாரதி ஆகியோர் கூறினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !