மதுரை அருகே உள்ள ஏற்குடி அச்சம்பத்து அருள்மிகு சமயாள்குடில் மாரியம்மன் கோவிலில் மாசி மகப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வளமான பாரதம், வைரஸ் நோய் பரவுவதை தடுக்கவும், விவசாயிகள் நலன் பெறவும் சுவாமி சக்தி அடிமைகள் தலைமையில் ஐந்து நிமிடம் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.