இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டிசியானது சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 03 குளிர்சாதன பெட்டிகள், 08 ஸ்லீப்பர் கோச்சுகள், 01 பேண்ட்ரி கார், 02 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன.
பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலின் முதல் ஓட்டத்தில், IRCTC, தென் மண்டலம்/சென்னை சார்பில் “ஷீரடி சாய் தரிசனம்” - என்ற பெயரில் சுற்றுப்பயணம் அறிமுகப படுத்தப்பட உள்ளது, இதன் உள்ளடக்கம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம் தொடங்கும் தேதி : 05.06.23
நாட்கள் : 7 நாட்கள்/8 இரவுகள்
பார்வையிடும் இடங்கள்: ஷீரடி , மந்திராலயம், நாசிக் (திரிம்பகேஷ்வர்) , பந்தர்பூர்,
கட்டணம்:
1. SL class: Rs. 13,950/-
2. 3Ac class: Rs. 24,642/-
பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலின் முக்கிய அம்சங்கள்:
1. 3AC வகுப்பு/SL வகுப்பில் ரயில் பயணம்
2. AC/NAC தங்குமிடம்
3. உள்ளூர் பார்வையிடுவதற்கான போக்குவரத்து
4. தென்னிந்திய உணவு
5. சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதி
இரயில் வழித்தடம் : கொச்சுவேலி, கொல்லம், செங்கோட்டை, தென்காசி,
ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர்.