புதுக்கோட்டையில் உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மற்றும் சங்கர் IAS அகாடமி இணைந்து நடத்திய பயிற்சித் திட்ட வகுப்பு கல்லூரி வளாகத்தில் 25.05.2023 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி சார்பில் முனைவர் S. வினோத் குமார் (பூச்சியியல் துறை), உதவிப் பேராசிரியர் மற்றும் திரு.R. பிரபு (வேளாண் விரிவாக்கத் துறை) உதவிப் பேராசிரியர் திரு S. ராஜகுரு (வேளாண் விரிவாக்கத் துறை) உதவிப் பேராசிரியர் ஆகியோர் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர்.
இந்த பயிற்சி வகுப்பிற்கு சங்கர் IAS அகாடமியின் தலைவர் திரு. s. சந்திரசேகர், செயலாளர் திரு. ரமேஷ் ஆதித்யா மற்றும் திருச்சி கிளையின் தலைவர் திரு. பிரபாகர் ஆகியோர் கலந்துகொண்டு நிறுவனத்தின் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றி விளக்கி மாணவர்களுக்கு எதிர்காலத் திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்விற்கு கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும், ஆசிரியப் பெருமக்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இறுதியாக திரு.R. பிரபு அவர்கள் நன்றி கூறினார்.