மதுரை செந்தமிழ் கல்லூரியில் முகவை மன்னர் ராஜா குமரன் சேதுபதி திருவுருவப் படத்திறப்பு விழா

Madurai Minutes
0

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் முகவை மன்னர் நா.குமரன் சேதுபதியின் திருவுருவப் படத்திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி இராஜேஸ்வரி நாச்சியார் தலைமை தாங்கினார். நான்காம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முகவை மன்னர் நாகேந்திர சேதுபதி, செந்தமிழ்க் கல்லூரியின் செயலாளர் ராணி லக்குமி குமரன் சேதுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக  தமிழ்நாடு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு மன்னர் நா.குமரன் சேதுபதி அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து அவரது வாழ்க்கை வரலாற்றையும், சிறப்பையும் எடுத்துக்கூறினார்.


மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, மீனாட்சிமிஷன் மருத்துவமனையின் நிறுவனர் சேதுராமன், கலைமாமணி ஞானசம்பந்தன் ஆகியோர் இராஜாவின் பெருமைகளை எடுத்துக்கூறி புகழுரை ஆற்றினர். முன்னதாக கல்லூரியின் துணைமுதல்வர் கோ.சுப்புலெட்சுமி வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் சாந்திதேவி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிறைவாக நான்காம் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் துரை கருணாநிதி நன்றி கூறினார்.


நிகழ்ச்சியில் முகவை மன்னர் குடும்பத்தைச் சார்ந்த பெரியவர்கள், உறவினர்கள், நண்பர்கள். முன்னாள் பேராசிரியர்கள், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள், ஆட்சிக்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !