மதுரை மாநகர காவல்துறை மற்றும் மதுரையில் உள்ள முத்தூட் குழுமம் தங்களது சமூக பொறுப்பு திட்டத்தின் மூலம் சாஜர் அறக்கட்டளையுடன் இணைந்து மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து இன்று (27.06.2023) மாபெரும் மருத்துவ நுரையீரல் பரிசோதனை முகாமை மதுரை மாநகர காவல் துணை ஆணையர் திரு. T. மங்களேஸ்வரன் (தலைமையிடம்) அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
இதில் 350 க்கும் மேற்பட்ட காவலர்கள் அவர்கள் குடும்பத்தினரும் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
இதில் மாநகர ஆயுதப்படை உதவி ஆணையர் திரு. மூத்தரசு, திரு. ராஜேஷ் ஆயுதப்படை ஆய்வாளர் மற்றும் சாஜர் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் திருமதி. டாக்டர் ஜாஸ்மின் ராஜ்குமார், முத்தூட் திட்ட மேலாளர் திரு. ஜெயக்குமார் மற்றும் மேலாளர் திருமதி. திவ்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.