ஒடிசா இரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மதுரை ஐஸ்வர்யம் அறக்கட்டளை சார்பில் அஞ்சலி

Madurai Minutes
0

ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக மதுரை ஐஸ்வர்யம் அறக்கட்டளை மற்றும் காந்தி மியூசியம் சார்பில் ஐஸ்வர்யம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் பாலகுருசாமி மற்றும் மேலாளர் ரமேஷ், பொருளாளர் அமுதநிலவன் ஆகியோர் தலைமையில் காந்தி மியூசிய வளாகத்தில்  கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. 


இந்நிகழ்வில் மாணவ, மாணவிகள், செவிலியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் நிர்வாக இயக்குனர் பாலகுருசாமி கூறியதாவது : " ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் சிக்கி இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்கும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைந்து, அவரவர் இல்லங்களுக்கு செல்ல இறைவனை வேண்டுகிறேன்" என உருக்கத்துடன் கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !