வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது

Madurai Minutes
0

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் – 1 மற்றும் மண்டலம் – 5 பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்வது குறித்து மாண்புமிகு மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கே.ஜே.பிரவீன்குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்  நேற்று (19.06.2023) நடைபெற்றது. 


மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளாக சாலைகள், மழைநீர் வடிகால்கள், பள்ளிக்கூடங்கள் சீரமைப்பு, அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், நலவாழ்வு மையங்கள், பூங்காக்கள் பராமரிப்பு, தெருவிளக்குகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் வளர்ச்சிப் பணிகளாக சாலைகள் சீரமைத்தல், மழைநீர் வடிகால்கள், விரிவாக்கப்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம்,  முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள்,  தெருவிளக்குகள் பராமரிப்பு,  அங்கன் வாடி மையங்கள், பள்ளி கூடுதல் கட்டிடங்கள், சத்துணவு கூடங்கள், மாமன்ற உறுப்பினர்கள் அலுவலகம் உள்ளிட்ட மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை  விரைவுப்படுத்தியும்,  நடைபெற உள்ள பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும்,  பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து சாலைகளை உடனுக்குடன் சீரமைப்பு பணிகள் செய்திடவும்,  மழைக்காலங்களில் மழைநீர் சாலைகளில் தேங்காதவாறு அருகில் உள்ள மழைநீர் வடிகால்களில் சேருவதற்கு உரிய பணிகளை மேற்கொள்வது குறித்தும், பொதுமக்களிடம் பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து மாண்புமிகு அமைச்சர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.  


இக்கூட்டத்தில் துணை மேயர் திரு.தி.நாகராஜன், மண்டலத் தலைவர் திருமதி.வாசுகி, தலைமைப் பொறியாளர் திரு.ரூபன் சுரேஷ், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் திரு,சாலிதளபதி. உதவி ஆணையாளர் திரு.காளிமுத்தன், உதவி ஆணையாளர் (கணக்கு) திருமதி.விசாலாட்சி, உதவி ஆணையாளர் (வருவாய்) திரு.மனோகரன், உதவி செயற்பொறியாளர்கள், உதவிப்பொறியாளர்கள்,  மாநகராட்சி அலுவலர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.   

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !