மதுரையில் 45 நிமிடங்கள் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவர்கள்

Madurai Minutes
0

மதுரை கரிமேடு பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி தலைவர் பாலு, செயலாளர் சுகன்யா, ஒருங்கிணைப்பாளர் விமல் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக டி.இ.எல்.சி சர்ச் பெரிய நாயகம் விஜயன், தன்னம்பிக்கை பேச்சாளர் துளிர், முதுகலை ஆசிரியர் திருநாவுக்கரசு, வைகை சிலம்பம் பள்ளி ஒருங்கிணைப்பாளர் முத்துமணி இந்திய சிலம்ப அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் சரவணபாண்டி, தென்னவர் சிலம்பாட்ட கழகம் மணிகண்டன் மீசைக்காரர் சிலம்பாட்ட கழகம் பொன் சங்கரமூர்த்தி வழக்கறிஞர் விஜய், மாணவர்களின் பெற்றோர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


45 நிமிடங்கள் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !