ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 3 ஆம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லா நாள் (International Plastic bag free day) கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலைக் காக்கவும் புவி மாசடையாமல் தடுக்கவும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்பதே இந்நாளின் நோக்கம்.
அந்தவகையில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வாக மதுரை, அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கல்லணை தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாட்டு காய்கறி விதைகள் அடங்கிய விதைப்பென்சில், துணிப்பைகளை மதுரை மண்ணின் மைந்தர்கள் அழகுராஜா வழங்கினார்.
இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் திருமதி.ஹேமா, ஆசிரியர்கள் திருமதி.பிச்சை கனி, திருமதி.ஜெயராணி, ரதி, பிரபாகரன் கலந்து கொண்டனர்.