அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் மதுரை மாவட்டம் சார்பாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மகர பூஜை வரை நடைபெற இருக்கும் அன்னதானம் ஒம் ஸ்ரீ ஜயப்பன் ஆன்மீக இதழின் ஆசிரியர் குருசாமி தலைமையில் கோவில் துணை ஆணையர் சுரேஷ் முன்னிலையில் தொடங்கியது.
விழாவில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சேவா சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் பாண்டியராஜன், குருசாமி, மனோகரன்,பாலமுருகன், சுப்பையா, மணி மற்றும் கோவில் கண்காணிப்பாளர் சத்தியசீலன் பேஸ்கார் நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.