திருச்சியில் வும்மிடி பங்காரு ஜூவல்லரியின் விற்பனை கண்காட்சி

Madurai Minutes
0

புதுமையான, நவீன வடிவமைப்பு மற்றும் உலகத்தரத்திலான கைவினைத்திறனுக்காக கொண்டாடப்படும், இந்தியாவின் பாரம்பரிய நிறுவனமான உம்மிடி பங்காரு ஜூவல்லரி சார்பில், திருச்சி, கோர்ட்யார்ட் பை மேரியட், (சங்கம் ஹோட்டல்) நிவந்தம் அரங்கில், புதன் மற்றும் வியாழன், நவம்பர் 22 மற்றும் நவம்பர் 23 ஆகிய இரண்டு நாட்கள், தங்கம், வைர நகைகளின் விற்பனை கண்காட்சி நடைபெறுகிறது. 


திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெறும் விபிஜே-யின் தங்கம், வைர நகை விற்பனை கண்காட்சி, கைவினைத்திறன்மிக்க தங்கம், வைர நகைகளை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்தக் கண்காட்சியில் பல்வேறு சிறந்த நகைகளுடன் காதணிகள், நெக்லஸ், தோடு, மூக்குத்தி மற்றும் திருமணத்திற்கான தங்க, வைர நகை தொகுப்புகள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது. 


கண்காட்சி குறித்து உம்மிடி பங்காரு ஜூவல்லரியின் நிர்வாக பங்குதாரர் திரு. அமரேந்திரன் உம்மிடி கூறுகையில், இந்த ஆண்டு முதற்பகுதியில் நாங்கள் திருச்சியில் நடத்திய கண்காட்சிற்கு வாடிக்கையாளர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். எங்களின் கலைநயமிக்க நுட்பமான தங்கம், வைர நகை விற்பனை கண்காட்சியை திருச்சியில் நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். கண்காட்சியில் பிரமிக்க வைக்கும் நகை தொகுப்புகளை காண திருச்சியில் உள்ள வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கிறோம் என்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !