மதுரை அவனியாபுரம் அருகில் உள்ள MGM நகரில் இயங்கி வரும் RAJ EXIM என்ற ஏற்றுமதி நிறுவனம் தனது 20-வது ஆண்டு வெற்றி விழாவை மதுரை அமீக்கா ஹோட்டலில் நடத்தியது.
2004-ல் துவக்கியை இந்நிறுவனமானது தொடங்கி இன்று வரை 109 நாடுகளுக்கு மேல் 30க்கும் அதிகமான பொருட்களை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. இதன் நிறுவனர் திரு K.திருப்பதி ராஜன் ஆவார். மேலும் இவர் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் கீழ் இயங்கும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தில் தலைவராகவும், வேளாண் வர்த்தக மையத்தின் செயலாளராகவும், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
நிறுவனர் திருப்பதி ராஜன் இவ்விழா பற்றி கூறுகையில்,
" இந்த இருபது ஆண்டு வெற்றி விழாவின் நோக்கமே, நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் உற்பத்தியாளர்கள் மற்றும் சேவையாளர்களை கௌரவப்படுத்துதலும், நிறுவனத்தின் ஊழியர்களை அங்கீகாரப்படுத்துவதும் ஆகும்" என்றார்.
இவ்விழாவில் இந்தியாவின் பல பகுதியில் இருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் சேவையாளர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவின் முக்கிய அம்சமாக நிறுவனர் திரு.திருப்பதி ராஜன் , ஒவ்வொருவரையும் மேடைக்கு அழைத்து அவர்களைப் பற்றி தனித்தனியே அவர்கள் சேவை மற்றும் தனித்தன்மையை விளக்கி கூறி பாராட்டி விருது வழங்கினார்.
இவ்விழாவில் முக்கிய விருந்தினராக வேளாண் வர்த்தக மையத்தின் தலைவர்.திரு ரத்தினவேல், தங்கமயில் ஜுவல்லரியின் பங்குதாரர் மற்றும் மதுரை இஸ்கான் அமைப்பின் தலைவர் திரு.பலராமன், S.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் செயலாளர் திரு.சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.