18.11.2023 அன்று திருப்பரங்குன்றம் சூரசம்ஹாரம் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் இருந்த தெற்கு வாசல் போக்குவரத்து பிரிவு சார்பு ஆய்வாளர் K.முருகன் என்பவர் வாகன விபத்திற்குள்ளாகி அகால மரணமடைந்தார்.
மேற்படி மறைந்த சார்பு ஆய்வாளரின் குடும்பத்திற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி அம்மன் சன்னதி கிளையில் இருந்து விபத்து காப்பீடு திட்டம் மூலமாக இழப்பீடு மற்றும் குழந்தைகள் கல்வி காப்பீடு தொகை ரூ.78,00,000/- கான காசோலைகளை மரணம் அடைந்த சார்பு ஆய்வாளரின் மனைவி சத்யா என்பவருக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. J.லோகநாதன் IPS அவர்கள் வழங்கினார்கள்.
நிகழ்வில் SBI வங்கியின் மதுரை மண்டலம் - I ன் மண்டல மேலாளர் திருமதி.V.ஹரிணி துணை மேலாளர் திரு.நரேஷ் கெளதம், திரு. கிரிதர் பிரசாத் மற்றும் SBI வங்கியின் அம்மன் சன்னதி கிளை மேலாளர் திரு.மகேஷ்வரன் மற்றும் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் N.ஹேமாமாலா மற்றும் போதை மறுவாழ்வு பயிற்சி மைய காவலர்கள் கலந்து கொண்டனர்.