தேசிய அளவிலான ஜுனியர் எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டி

Madurai Minutes
0
தேசிய அளவிலான ஜுனியர் மாணவர் மற்றும் மாணவியருக்கான 33 வது எறிபந்து சாம்பியன்ஷிப்  போட்டி  கோவையில் உள்ள தியாகி ராமசாமி நினைவு பள்ளியில் டிசம்பர் 27 முதல் 30 வரை நடைபெற்றது.

மாணவர் மற்றும் மாணவியருக்கான தனிப்பிரிவுகளில் நடந்த போட்டிகளில் தமிழ்நாடு, புது டில்லி, ஆந்திரா, கோவா,கர்நாடகம்,ராஜஸ்தான் உள்ளிட்ட 28 மாநிலங்களிலிருந்தும்.. மாணவர் பிரிவில் 16 அணிகளும் ,மாணவியர் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்ற போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பாக மதுரை- அனுப்பானடி வேலம்மாள் போதி வளாக பள்ளி மாணவர்கள் ஶ்ரீ சைலேஷ், தீபன்சஞ்சீவி,மற்றும் மாணவி லத்திமா ஆகியோர் பங்கேற்று தமிழ்நாடு மற்றும் டில்லி அணிகளுக்கு இடையிலான நடைபெற்ற இறுதிப்போட்டியில்  தமிழ்நாடு அணி இரண்டாம் இடத்தை பிடித்து கோப்பை மற்றும் பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதனையொட்டி மாணவர்கள் ஶ்ரீசைலேஷ், தீபன்சஞ்சீவி மற்றும் மாணவி லத்திமா ஆகியோர்களை  வேலம்மாள் கல்விக் குழுமத்தலைவர் திரு. M.V. முத்துராமலிங்கம், இயக்குநர் திரு .மு.சசிக்குமார் பள்ளிமுதன்மை முதல்வர் திரு.பாலமுருகன், துணை முதல்வர் திருமதி. அனிதா அரவிந்த், உடற்பயிற்சி ஆசிரியை திருமதி.செ.உமாராணி ,பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தன.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !