மதுரை மத்திய சிறையில் கண் மருத்துவ முகாம்

Madurai Minutes
0

மதுரை மத்திய சிறையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறைகளில் உள்ள சிறைவாசிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது மதுரை மத்திய சிறையில் பல்வேறு சிறப்பு மருத்துவர் கொண்டு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது இன்று மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இந்திய சிறைப்பணி(PMI)தொண்டு நிறுவனம்  இணைந்து நடத்திய மெகா கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் மதுரை சரக சிறைத்துறை டிஐஜி திரு .பழனி அவர்கள் தலைமையில் மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு. சதீஷ்குமார் அவர்கள் முன்னிலையில் அரவிந்த் கண் மருத்துவமனை   கண் மருத்துவர்கள் குழுவினர் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறைவாசிகளுக்கு கண் பிரச்சனை தொடர்பான கிட்டப் பார்வை தூர ப்பார்வை ,வெள்ளை எழுத்துக்கள், மற்றும் கண் அழுத்த நோய் கண் புரை ஆகியவற்றிற்கு சிகிச்சை அளித்தனர்.


அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். மேலும் சிறைவாசிகளுக்கு தேவையான கண் கண்ணாடிகள் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இந்திய சிறை பணி தொண்டு நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தனர்.


இந்நிகழ்ச்சிகளை இந்திய சிறைப்பணி தொண்டு நிறுவனம் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. முருகேசன் மற்றும் மதுரை மத்திய சிறையின் சிறை அலுவலர், சிறை மருத்துவர்கள்,  மற்றும் நல அலுவலர்,  சமூகவியல் வல்லுனர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


மதுரை மத்திய சிறையில் 273 சிறைவாசிகளுக்கும் பெண்கள் தனிச்சிறையில் 36 சிறைவாசிகளும் கலந்து கொண்டு சிகிச்சை பலன் பெற்றனர் இவர்களில் 159 சிறைவாசிகளுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் விரைவில் வழங்கப்பட உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !