தமிழ் நாடு காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான 63 வது தடகள விளையாட்டு போட்டிகள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் கடந்த 13.02.2024 முதல் 16.02.2024 வரை நடைபெற்றது.
இதில் தென் மண்டல காவல்துறை சார்பில் கலந்து கொண்ட மதுரை மாநகரை சேர்ந்த C2-சுப்பிரமணியபுரம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.குமரேசன் அவர்கள் 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கம்,வெள்ளி பதக்கங்களும், மதிச்சியம் போக்குவரத்து தலைமை காவலர் திரு. செந்தில்குமார் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல மற்றும் வெள்ளி பதக்கமும், சைபர்கிரைம் காவல்நிலைய தலைமை காவலர் திரு. முனீஸ்வரன் நீளம் தாண்டுதலில் வெள்ளி பதக்கமும், B4-கீரைத்துறை காவல்நிலைய தலைமை காவலர் திரு. முகமது முபாரக் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கங்களும், சென்ட்ரல் போக்குவரத்து முதல்நிலை காவலர் திரு. இளையராஜா 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கமும், D1-தல்லாகுளம் காவல்நிலைய முதல்நிலை காவலர் திரு.சின்னபாண்டி மற்றும் ஆயுதப்படை காவலர் திரு. யோகேஸ்வரன் ஆகியோர் கோ-கோ விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்றனர்.
வெற்றிபெற்ற அனைவரையும் மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.