மதுரை மத்திய சிறையில் சித்தா சிறப்பு மருத்துவ முகாம்

Madurai Minutes
0

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்து சிறைகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மதுரை மத்திய சிறையில் மதுரை ராஜா சித்த மருந்தகம் மற்றும் கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் வீராசாமி யோகேஸ்வரர் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தும் சிறப்பு மெகா சித்த மருத்துவ முகாமினை மதுரை சரக சிறைத்துறை டிஐஜி திரு. பழனி மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு சதீஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர் 


சித்த மருத்துவர் திரு. ராஜமுருகன் தலைமையில் சித்த மருத்துவர்கள் கிருத்திகா  பவித்ரா, சுப்புலட்சுமி, பிரியங்கா  ஆகியோர் சிறைவாசிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.


மருத்துவ முகாமில் 230 சிறைவாசிகள் கலந்து கொண்டு காய்ச்சல், சளி அஜீரண கோளாறு, சுவாசப் பிரச்சனை மற்றும்   தோல் நோய்களுக்கு  சிகிச்சை பெற்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !