கிராம பெண்கள் கொண்டாடிய மகளிர் தினம்

Madurai Minutes
0

நேருயுவ கேந்திரா மற்றும் வின் ஸ்டார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மதுரை மாவட்டம் மேலூர், பழைய சுக்காம்பட்டியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. 


பெண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம், மூத்த வயது பெண்கள் ஆரோக்கியம், மார்பக புற்றுநோய் உள்ளிட்டவைகள் குறித்தும் பேசப்பட்டது. மேலும் இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பு பரிசும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். 


போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பெண்கள் பேசுகையில்...," எங்களுடைய கிராமத்தில் முதல் முறையாக பெண்கள் தினம் கொண்டாடியது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றது மன இருக்கத்தை விலக செய்கிறது. மேலும் பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தை எப்படி நிகழ்த்த வேண்டும் என்ற தலைப்பில் மன்ற இளைஞர்கள் பேசியது புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !